ஆழ்ந்த உறக்கத்தில்
கனவு என்னை
குளியலறையை நோக்கி
அழைத்துச் சென்றது.
பளபளக்கும் கண்ணாடியில்
அன்று குளித்தவர்களின்
நிர்வாணம்
காட்சிகளாகத் தோன்றி
மறைந்தன.
ஒரு சமயம்
இதே கண்ணாடியை
உற்றுப் பார்க்கையில்
தம்பி
சுய இன்பம் கொண்டதையும்
ஐந்து குழந்தைகளுக்குப்
பிறகு
கோடுகள் நிரம்பி
ஊதிப்பெருத்த
அம்மாவின் வயிற்றையும்
திரும்பத் திரும்ப தன்னை
வசீகரமாக்கும்
மீசையில் கருப்பு மை பூசும்
அப்பாவையும்
பார்க்க நேர்ந்துவிட்டது
நான் பயந்தது போலவே
எல்லா நிர்வாணத்தையும்
ஆக்கம்: தோழி(மலேசியா)
நன்றி: வல்லினம்( செப்டம்பர் 2009)
No comments:
Post a Comment